ஏப்.6 ல் திருப்பதியில் வசந்த உற்சவம்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி:

திருப்பதியில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் வசந்த உற்சவம் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி துவங்குகிறது.

ஏமுமலையின் மீது எழுந்தருளி பக்தர்களுக்கு கேட்டதெல்லாம் கொடுத்து அருள் புரிந்து வரும் ஏழுமலையான்,வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலின் சிறப்பான உற்சவங்களில் ஒன்று வசந்த உற்சவம்.

பிரம்மோற்சவம் போல் வசந்த உற்சவமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் வசந்தஉற்சவம் 3 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடெங்கிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானபக்தர்கள் வசந்த உற்சவத்தில் கலந்து கொண்டு பெருமாளின் அருள் பெற்று செல்கிறார்கள்

இந்த ஆண்டு வசந்த உற்சவம் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி துவங்குகிறது. ஏப்ரல் மாதம் 7-ம் தேதி ஸ்வர்ண ரத உற்சவம்நடைபெறுகிறது.

உற்சவ மூர்த்திகளான வெங்கடேச பெருமாள், ராமர், கிருஷணருக்கும் மேலும் உள்ள துணை விக்கிரகங்களுக்கும்வசந்த உற்சவம் நடைபெறும்.

கிரகஸ்தர்களாக பொறுப்பேற்க உள்ளவர்கள் (திருமணம் செய்து கொள்ள இருப்பவர்கள்) நாள் ஒன்று ரூ 3,000செலுத்தி வசந்த உற்சவத்தில் பங்கேற்கலாம்.

கல்யாண உற்சவம், பிரம்மோத்சவம், ஊஞ்சல் சேவை, சஹஸ்ரதீப அலங்காரம், சிறப்பு பூஜைதள் உள்ளிட்டஅர்ஜிதா சேவைகள் வசந்த உற்சவத்தின் போது நடைபெறாது.

இந்த விழாவின் போது ஸ்ரீ மலையப்ப வாரு சுவாமியும் அவருடன் உள்ள மூர்த்திகளும் வசந்த மண்டபத்திற்குஎழுந்தருள்வார்கள். வசந்த உற்சவத்தை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+