அந்த கடைசி வினாடியில்....
ஸ்ரீஹரிகோட்டா:
ராக்கெட்டை செலுத்தும் பணி தோல்வியடைந்த பின்னர் மிகுந்த கவலைதோய்ந்த முகத்துடன் காணப்பட்ட இந்தியவிண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் டாக்டர் கஸ்தூரிரங்கன் தனது சகாக்களுடன் ஆலோசனை நடத்தியபின்னர் உடனடியாக நிருபர்களைச் சந்தித்தார்.
அவர் கூறுகையில்,
ராக்கெட்டை ஏவுவதற்கு 10 நிமிடங்கள் இருந்த நிலையில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் விஞ்ஞானிகளிடமிருந்துகம்ப்யூட்டருக்கு மாற்றப்பட்டன. ராக்கெட்டை தரையிலிருந்து கிளப்ப உதவும் 4 சிறிய ஸ்ட்ராப் ஆன்மோட்டார்களை கம்ப்யூட்டர் இயக்கியது.
அந்த மோட்டர்களில் ஒன்று மட்டும் சரியாக இயங்கவில்லை. 4 மோட்டர்களும் 90 சதவீத அளவுக்கு உந்துசக்தியை தந்தால் தான் ராக்கெட்டின் முக்கியமான என்ஜின் இயக்கப்படும். ஆனால், ஒரு மோட்டர் சரியாகஇயங்காததை 3 வினாடிகளில் கம்ப்யூட்டர் உணர்ந்து கொண்டுவிட்டது. இதனால், ராக்கெட்டின் என்ஜினைகம்ப்யூட்டர் இயக்கவில்லை. உடனடியாக ராக்கெட் ஏவப்படுவதையும் கம்ப்யூட்டரே நிறுத்திவிட்டது.
இது எல்லாம் ராக்கெட்டின் முக்கிய என்ஜின் இயக்கப்படுவதற்க ஒரு நொடிக்கு முன் நடந்தது. இதன் மூலம்ராக்கெட்டை நம்மால் காப்பாற்றி விட்டோம்.
இந்தத் தகவலை பிரதமரிடமும் தெரிவித்துவிட்டேன். அவரும் நம்மைப் போலவே மிகவும் வருத்தமடைந்தார்.ஆனால், ஆராய்ச்சிகளில் இது எல்லாம் சகஜம் தான். இந்தத் தோல்வியால் விஞ்ஞானிகள் சோர்ந்துவிடக் கூடாதுஎனவும் வாஜ்பாய் கூறினார்.
விரைவிலேயே குறையைப் போக்கி ராக்கெட்டை ஏவுவோம் என பிரதமரிடம் தெரிவித்தேன்.
இப்போதுள்ள ஆரம்பகட்ட விவரங்களை வைத்துத் தான் ராக்கெட் ஏன் பறக்கவில்லை என்பதைவிளக்கியுள்ளேன். இன்னும் முழு விவரங்கள் தெரியவில்லை.
இரவும் பகலும் நாங்கள் உழைப்போம். பிரச்சனை எங்கு நடந்தது என்பதை அறிந்த பின்னர் அதை உடனடியாகநீக்கி மீண்டும் ஜி.எஸ்.எல்.வியை பறக்க வைப்போம்.
நமக்கு இது மிகப் பெரிய ஏமாற்றம் தான் என்றார்.