ஜெ. முதல்வரானால் ஆபத்து: கிருஷ்ணசாமி எச்சரிக்கிறார்
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதாமுதல்வராக ஆனால், தலித்கள், உ ழைப்பாளிகள்உள்பட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆபத்து என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிகூறியுள்ளார்.
சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களை கிருஷ்ணசாமி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மதுரையில் நடந்த எங்கள் கட்சியின் செயல் வீரர் கூட்டத்தின் போது கூடிய கூட்டம், தேசிய ஜனநாயககூட்டணியின் வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்திருந்தது.
சட்டசபைத் தேர்தலில் நள்ளிரவு 12 மணி வரை பிரசாரம் செய்ய அரசியல் கட்சிகள் அனுமதி கோரியுள்ளன.அப்படி அனுமதி கிடைக்கும் பட்சத்தில், அமைதியான முறையில் வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய வேண்டும்.கிராமங்களில் சிறு வேன்களில் சென்று பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் அனுமதிக்கக் கூடாது. அப்படி நடந்தால் தாழ்த்தப்பட்டவர்கள்,உழைப்பாளிகள், ஏழைகள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட, சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு ஆபத்து நேரிடும்.திமுக தலை மையிலான கூட்டணிக்குத்தான் இந்த முறை மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள்.
புதன்கிழமை முதல் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறேன். 31-ம் தேதி வரை புதுக்கோட்டை மாவட்டத்திலும், 1-ம்தேதி முதல் 3-ம் தேதி வரை தஞ்சாவூரிலும், 6-ம் தேதி முதல் 8ம் தேதி வரை நாமக்கல் மாவட்டத்திலும், 11-ம்தேதி முதல் 14-ம் தேதி வரை மதுரை மாவட்டத்திலும் பிரசாரம் செய்கிறேன்.
நான் மீண்டும் ஓட்டப்பிடாரம் தொகுதியில்தான் போட்டியிடுவேன். கடந்த 50 ஆண்டுகளாக இந்தத் தொகுதிபுறக்கணிக்கப்பட்டு வந்தது. நான் எம்.எல். ஏவான பிறகுதான் தொகுதிக்கு விமோசனம் பிறந்தது. எனவேதொகுதியை மாற்றத் தேவையில்லை. அங்குதான் மீண்டும் போட்டியிடுவேன் என்றார் டாக்டர் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications