நிருபர்களை வேவு பார்க்கும் புதுவை போலீஸ்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பத்திரிக்கைகளுக்கு உள்ள சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்று பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம்பத்திரிக்கையாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார்.
பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் புதன்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
பாண்டிச்சேரியில் கடந்த 10 நாட்களாக சில நிருபர்களின் செல்போன் பேச்சுக்கள் போலீசாரால் ஒட்டுக்கேட்கப்பட்டு வருகின்றன என்று நிருபர்கள் புகார் கூறியுள்ளனர். இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்தும்படிதலைமைச் செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விரைவில் அறிக்கை சமர்பிக்கப்படும். இதையடுத்து நிருபர்களின் செல்போன் பேச்சுக்களை ஒட்டுக்கேட்டவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என்றார் சண்முகம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications