த.மா.காவில் இருந்து ப.சி. நிரந்தர நீக்கம்?
சென்னை: சென்னையில் புதன்கிழமை கூடும் த.மா.கா. ஒழுங்கு நடவடிக்கை குழு ப.சிதம்பரத்தை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து முடிவு செய்ய உள்ளது.
த.மா.கா.வில் இருந்து கொண்டே த.மா.கா. ஜனநாயகப் பேரவை என்ற அமைப்பை தொடங்கிய ப.சிதம்பரம் த.மா.கா.வில் இருந்துதற்காலிகமாக நீக்கப்பட்டார்.
பின்னர் அவரை ஏன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கக் கூடாது என விளக்கம் அளிக்க கோரி த.மா.கா. ஒழுங்கு நடவடிக்கை குழுநோட்டீஸ் அனுப்பியது.
அதற்கு சிதம்பரம் அளித்த பதிலில், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதை எதிர்ப்பதற்கான காரணங்கள் கூறப்பட்டு இருந்தன.
ஆனால், தனியாக இயக்கம் ஆரம்பித்தது பற்றியோ, திமுகவை ஆதரிப்பதாக தெரிவித்தது பற்றியோ அவர் தனது பதிலில் குறிப்பிடவில்லை.
இதனை பெற்றுக் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைகுழு சிதம்பரம் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்ய புதன்கிழமை சென்னையில் கூடுகிறது.
இக்கூட்டத்தில், சிதம்பரத்தை நீக்கம் செய்யும் அதிகாரம் மூப்பனாருக்கு அளிக்கப்படலாம். த.மா.கா.வை ஆரம்பித்த போதும் அதன் பிறகும்பல்வேறு சந்தர்ப்பங்களில் சிதம்பரத்தின் ஆலோசனைகளை கேட்டவர் மூப்பனார்.
அவர் சிதம்பரத்தை கட்சியில் இருந்து நீக்க விரும்பவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை வெளிப்படையாக எதிர்த்ததால் கட்சியின் பல்வேறுதலைவர்களின் வற்புறுத்தலின் பேரில் தற்காலிக நீக்கம் செய்தார்.
ஆனால், சிதம்பரத்தை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்க த.மா.கா.வில் உள்ள சிதம்பரத்தின் எதிர்ப்பாளர்கள் தீவிரமாக உள்ளனர்.
இதனால், மூப்பனார் வேறு வழியின்றி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையை ஏற்று தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications