40, 30, 21, 18....?: திமுகவிடம் சிக்கித் தவிக்கும் மதிமுக
சென்னை:
திமுக, மதிமுக இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பூசல் அறிக்கை போராகதொடர்கிறது. கருணாநிதி ஏமாற்றி விட்டதாக வைகோ கூறியதை கருணாநிதிபுதன்கிழமை மறுத்து இருந்தார்.
அந்த மறுப்பிற்கு ஒரு மறுப்பாக தற்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவியாழக்கிழமை ஒரு அறிக்கை விட்டுள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:
திமுக தலைவர் கருணாநிதியுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நடத்தியபேச்சுவார்த்தையின் போது 40 தொகுதிகள் கொண்ட பட்டியலைக் கொடுத்து அதில் 30தொகுதிகளை வழங்குமாறு கோரினேன்.
ஆனால் 30 தொகுதிகள் தர இயலாது, 21 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்றுதிமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இதையடுத்து நாங்கள் கேட்கும் 21 தொகுதிகளைத் தந்தால், அவற்றை ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறினேன்.
இதை கருணாநிதியும் ஏற்றுக் கொண்டார். அதன் பிறகே திமுகவுடன் தொகுதிப்பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்.
இந்த நிலையில், நாங்கள் கொடுத்த பட்டியலில் இருந்து 12 தொகுதிகளை மட்டுமேஒதுக்க திமுக முன்வந்தது.
மேலும், திருவல்லிக்கேணி, மைலாப்பூர், தி.நகர், தாம்பரம் ஆகிய சென்னைதொகுதிகளில் ஏதாவது 2தொகுதிகளை ஒதுக்குமாறும் கோரியிருந்தோம். அதையும்திமுக நிராகரித்து விட்டது.
நிலைமை இப்படி இருக்க மதிமுகவுக்கு 18 தொகுதிகள் வரை ஒதுக்க முன் வந்ததாகமுதல்வர் கருணாநிதி பேட்டி அளித்திருப்பது தவறானது என்று கூறியுள்ளார் வைகோ.
திமுக ஒதுக்க முன்வந்துள்ள தொகுதிகள் குறித்து விவாதிப்பதற்காக மதிமுக மாவட்டச்செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாகநடந்து வருகிறது.