ராக்கெட்டுக்கு சேதமில்லை
சென்னை:
நேற்று விண்ணில் செலுத்தப்பட இருந்து கைவிடப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை கோளாறுகளை நீக்கிய பின்மீண்டும் பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ராக்கெட்டின் ஸ்ட்ராப் ஆன் என்ஜினில் ஏன் தீ பிடித்தது என்பது உள்ளிட்ட ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்ஈடுபட்டுள்ளனர்.
ராக்கெட் பறப்பது நிறுத்தி வைக்கப்பட்ட உடனேயே ராக்கெட்டில் நிரப்பப்பட்ட எரிபொருளை அப்புறப்படுத்தும்பணி தொடங்கியது. இரவோடு இரவாக ராக்கெட்டிலிருந்து எரிபொருளை விஞ்ஞானிகள் நீக்கிவிட்டனர்.
இந்த எரிபொருளை ராக்கெட்டில் விட்டு வைத்தால் அது டாங்குகளை மட்டுமின்றி என்ஜின்களையும்அரித்துவிடும்.
அதே போல ராக்கெட்டும் ஏவு தளத்திலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது.
கம்ப்யூட்டர் மட்டும் இறுதி நேரத்தில் குறையைக் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் 1 பில்லியன் ரூபாய்மதிப்புள்ள ராக்கெட்டையும், அதில் பொறுத்தப்பட்டிருந்த 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள செயற்கைக்கோளையும் நாம் இழந்திருப்போம் என்கிறார் இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர்.












Click it and Unblock the Notifications