லாட்டரி அதிபர் கே.ஏ.எஸ் சேகரின் சொத்துக்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை லாட்டரி அதிபர் கே.ஏ.எஸ் சேகரின் அசையும் சொத்துக்கள், மற்றும் அசையாச் சொத்துக்களைவணிகவரித்துறை அதிகாரிகள் வரிப்பாக்கிக்காக ஜப்தி செய்தனர்.
மதுரை லாட்டரி தொழில் அதிபராகத் திகழ்ந்தவர் கே.ஏ.எஸ்.சேகர். இவர் அரசுக்குச் செலுத்த வேண்டியவரிப்பாக்கியாக 4.7 கோடி ரூபாய் வைத்திருந்தார். இதனை அதிகாரிகள் பலமுறை வலியுறுத்தியும், அவர்வரிப்பாக்கியைச் செலுத்தவில்லை.
எனவே, அதிரடியாக ஜப்தி நடவடிக்கையில் 30 அதிகாரிகள் இறங்கினர். அவருடைய அசையும் சொத்துக்கள்,அசையாச் சொத்துக்களை பறிமுதல் செய்தன ர்.
இதில், 60 கம்ப்யூட்டர்கள், லேசர் பிரிண்டர், ரெப்ரிஜிரேட்டர், ஜெராக்ஸ் மெஷின்கள், டேபிள்கள், சேர்கள் மற்றும்பல்வேறு பொருட்களை ஜப்தி செய்தனர்.












Click it and Unblock the Notifications