ஜனாதிபதிக்கு அறுவை சிகிச்சை முடிந்தது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு வியாழக்கிழமை காலை அறுவைசிகிச்சை நடந்தது.
இவரது பித்தப் பையில் (கால் பிளாடர்) உருவாகியிருந்த கற்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.
இது குறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது கே.ஆர்.நாராயணனின் உடல் நிலைநன்றாக உள்ளது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. தற்போது அவர் உடல் நிலை தேறி வருகிறார் என்றுகூறப்பட்டுள்ளது.
முன்னதாக, டாக்டர் பிரதீப் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச்செய்து முடித்தனர்.
ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனைப் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். இரண்டு நாட்கள்ஜனாதிபதி மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications