கேரளத்தில் ஒரு வீரப்பன்!
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரப்பனைத் தேடும் பணியில் போலீசார்ஈடுபட்டிருந்தனர்.
வாளையார்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது ஒரு கும்பலைக் கண்டனர். அந்தக்கும்பலை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
அப்போது அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களில் தமிழக வீரப்பனைப் போலவே கேரளாவில் வன விலங்குகளைவேட்டையாடி வந்த கேரள வீரப்பன் ஒருவரும் பிடிபட்டார். இவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கோவைசிறையில் அடைத்தனர்.
இந்த கேரள வீரப்பன் முன் ஜாமீன் கேட்டு மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 5 ல் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்தமாஜிஸ்திரேட் நம்பிராஜன், அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் பிணையத் தொகையின் பேரில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications