நைரோபி பேருந்து விபத்தில் 100 பேர் பலி
நைரோபி:
கென்யா, மாலின்டி நகரில் பாலத்தின் மீது இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்டதில்13 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் காயமடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு மாண்டி நகரில் இரண்டு பேருந்துகள் பாலத்தின் மீது நேருக்குநேர் மோதிக் கொண்டு ஏரிக்குள் விழுந்தன.இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர்காயமடைந்துள்ளனர்.3 பேர் காணவில்லை என போலீசார் கூறினர்.
இது குறித்து கென்யா தொலைக்காட்சி செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது:
பாலத்தின் மீது வந்து கொண்டிருந்த இரண்டு பேருந்தும் மோதிக் கொண்டபின்ஏரிக்குள் விழுந்தன. இரண்டு பேருந்திலும் 100 பயணிகளுக்கும் மேல் பயணம் செய்துகொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் இறந்திருக்க்கூடும் என அஞ்சப்படுகிறது எனகூறப்பட்டிருந்தது.
தொலைக்காட்சியின் இந்த செய்தி குறித்து கருத்து தெரிவிக்க போலீசார்மறுத்துவிட்டனர். மீட்பு நடவடிக்கை குறித்தும் போலீசார் எதுவும் விளக்கமாககூறவில்லை. திங்கள்கிழமைதான் விபத்தின் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்யமுடியும்என்றனர்.












Click it and Unblock the Notifications