அழகிரியை இழுக்க முயலும் சசிகலா குடும்பம்
மதுரை:
அழகிரியின் ஆதரவாளர்கள் தொடங்கியுள்ள அழகிரி ஆதரவாளர்கள் பேரவையை அதிமுகவுடன் இணைக்கசசிகலா குடும்பம் முயற்சி செய்து வருவதாகத் தெரிகிறது.
ஜெயலலிதாவுடன் அழகிரி பேரவை ஆட்களை சந்திக்க வைக்க ஏற்பாடுகள் நடந்ததாகவும், ஐந்து தொகுதிகள்வாங்கித்தர உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அழகிரி ஆதரவு பேரவையை நம்பி களத்தில் இறங்க முடியாது. அவர்கள் திடீரென்று பல்டி அடித்தாலும்அடிக்கலாம் என்று ஜெயலலிதா கூறியதாகவும் தெரிகிறது.
இதற்கிடையே மதுரையில் அழகிரி, ஸ்டாலின் மோதலை சரி செய்யாவிட்டால் திமுகவுக்குப் பெரும் இழப்புஏற்படும் என்று அழகரி தரப்பினர் கூறி வருகின்றனர்.
ஆனால் அழகிரியால் திமுகவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று கூறுகின்றனர் ஸ்டாலின் ஆதரவாளர்கள்.
நாளுக்கு நாள் பல திருப்பங்கள் ஏற்பட்டு வரும் தமிழக அரசியலில் அழகிரி அதிமுகவில் சேர்ந்தாலும்ஆச்சரியப்படுவதற்கில்லை.