சிறையில் அல்-உம்மா இயக்கத்தினர் உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை மத்திய சிறையில் அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா உள்பட 220 அல் உம்மா இயக்கத்தினர்உண்ணாவிரதத்தை துவக்கினர்.

இளம் சிறை வார்டர்களை மாற்றக் கோரி முதல்வருக்கு பாட்ஷா கடிதம் எழுதியுள்ளார்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கோவை மத்திய சிறையில் 167 பேரும், பிற வழக்குகள் தொடர்பாக சிறையில்உள்ள அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த சிலரும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சிறைக்குள்உண்ணாவிரதத்தை துவங்கினர்.

இந்த நிலையில் அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள மனுவில்கூறியுள்ளதாவது:

கடந்த சில ஆண்டுகளாக தமிழக சிறைகளில் பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. இதற்கு மூலகாரணமாக 1998ம்ஆண்டு பணிக்கு அமர்த்தப்பட்ட இளம் சிறை வார்டர்களே ஆவர். இவர்களுக்கு சிறையில் பணியாற்றும்அனுபவமும், பயிற்சியும் இல்லை.

பணியில் ஆர்வம் இல்லை. அதிகாரிகளுக்குக் கட்டுப்படாத தன்மை இவர்களிடம் அதிகமாக உள்ளது. இவர்கள்பத்திரிக்கைகளுக்குத் தவறான செய்தி கொடுத்து வருகின்றனர். இவர்களைத் தட்டிக் கேட்கும் உயர் அதிகாரிகளைமிரட்டுகின்றனர். இவர்களது தவறான அணுகுறையால் சிறையில் பதட்டம் நிலவி வருகிறது. சிறைவாசிகளைப்பார்க்க வரும் குடும்பத்தினரை கேலி கிண்டல் செய்கின்றனர்.

எனவே இப்படிப்பட்ட சிறை வார்டர்களை உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும். இவர்கள் தொடர்ந்துபணியில் நீடித்தால் சிறை நிர்வாகத்திற்கு கேடாக அமையும். இவர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்துவிசாரணை நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல்காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொள்வாதகத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+