ஊழல்: கஸ்டம்ஸ் உயர் அதிகாரி கைது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, மத்திய சுங்கம் மற்றும் கலால் வரித்துறை (கஸ்டம்ஸ் மற்றும் எக்ஸைஸ்) வாரியத்தின் தலைவர் வர்மா, அவரதுமகன் உள்பட 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

டெல்லியில் சிபிஐ செய்தி தொடர்பாளர் கான் நிருபர்களிடம் தெரிவித்த தகவலின் படி,

சென்னையை சேர்ந்த ஏ.கே. என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு கஸ்டம்ஸ் சலுகை அளிப்பதில் ஊழல் நடந்துள்ளதாக கஸ்டம்ஸ் அதிகாரிகள் மீது புகார்தெரிவிக்கப்பட்டது.

இது பற்றி விசாரித்த சிபிஐ, பல்வேறு கஸ்டம்ஸ் அதிகாரிகளின் வீடுகளை சோதனையிட்டது. மத்திய சுங்கம் மற்றும் கலால் வரித்துறை வாரியத்தின்தலைவரான வர்மாவின் வீட்டிலும் சிபிஐ ரெய்டு நடைபெற்றது.

இச்சோதனையின் போது பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சொத்துகளில் வர்மா முதலீடு செய்து இருந்த ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியது.

இதனையடுத்து இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக வர்மா, அவரது மகன் சித்தார்த் வர்மா , மற்றும் வர்மாவின் நண்பர் பாவ்னா சர்மாஆகியோரை டெல்லிசிபிஐ ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தது.

தரகர் மூலம் வர்மாவை அணுகிய சென்னை நிறுவனத்தின் பார்ட்னர் ஸ்ரீவாணனையும் சென்னையில் சிபிஐ கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரும் திங்களன்றுநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். இதில் சம்பந்தப்பட்ட தரகர் தலைமறைவாகிவிட்டார்.

ஐ.ஏ.என்.எஸ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+