செங்கல்பட்டு தொகுதியில் ஜெ. போட்டி?
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாபோட்டியிடுவார் என்று தெரிகிறது.
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களுடன் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்றுஜெயலலிதா ஆலோசனை செய்து வருகிறார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்ததொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பாமக நிறுவனத் தலைவர் ராமதாசுடன் பேசிய போது,செங்கல்பட்டு தொகுதியை தங்களுக்கு ஒதுக்குமாறு கேட்டார் ராமதாஸ்.
அப்போது, செங்கல்பட்டு தொகுதியில் நான் போட்டியிடப் போகிறேன். வேறு ஏதாவது தொகுதியைக் கேளுங்கள்என்று ஜெயலலிதா கூறினாராம்.
இந்தத் தகவல் தெரிந்ததும் செங்கல்பட்டு அதிமுக தொண்டர்கள் மிகவும் உற்சாகமடைய ஆரம்பித்து விட்டனர்.
செங்கல்பட்டு தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடப் போகிறார் என்று அதிமுக வினர் பேசி வருகின்றனர்.ஏற்கனவே பெரியகுளத்தில் ஜெயலலிதா போட்டியிடுவார், ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவார் என்றஅதிமுகவினர் கூறி வருவது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications