For Daily Alerts
Just In
முன் விரோதத்தால் 2 நண்பர்கள் கொலை
திருச்செங்கோடு:
முன் விரோதம் காரணமாக இரண்டு நண்பர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாகபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்செங்கோடு மல்ல சமுத்திரம் அருகேயுள்ள வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (25). இவரது நண்பர்இளஞ்செழியன். இவர் லாரி டிரைவராக வேலைபார்த்து வருகிறார்.
இந்த நிலையில் ராஜேஷூம், இளஞ்செழியனும் திருச்செங்கோடு அருகே உள்ள ஒரு மலைப் பகுதியில் கத்திக்குத்துகாயங்களுடன் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
இவர்களுக்கும் அதே ஊரைச் சேர்ந்த மணி என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார்வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments
Story first published: Monday, April 2, 2001, 5:30 [IST]