அய்யோ! இன்னொரு கட்சி
கோவை:
கோவையில் ஆர்ய வைசியர்கள் இப்போது புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கியுள்ளனர்.
ஆர்ய வைசிய முன்னேற்றக் கழகம் என்ற இந்தக் கட்சி வரும் தேர்தலில் போட்டியிடுமா என்பது குறித்து கட்சிநிர்வாகிகள் ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர்.
கோவையில் உள்ள ஆர்ய வைசியர்கள் என்ற பிரிவினர், தங்களை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்க்கவேண்டும்.
தங்களது இனத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர்களுக்கு அரசு பதவிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றபல கோரிக்கைகளை விடுத்து வந்தனர்.
ஆனால், ஆர்ய வைசியர்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேறவில்லை. எனவே, மற்ற சாதிக் கட்சிகளைப்போலவே இவர்களும் இப்போது ஆர்ய வைசிய முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளனர்.இந்த கட்சி வரும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த அமைப்பிற்கு கோவை, தர்மபுரி, ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் ஆதரவு இருப்பதாகக் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு பகுதியிலும் தங்களுக்கு வெற்றியை நிர்ணயிக்கக் கூடிய அளவிற்கு 20 ஆயிரம் ஓட்டுகள் இருப்பதாகஇக் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.