மீண்டும் கயானா நாட்டு அதிபராகிறார் இந்தியர்
வாஷிங்டன்:
தென் அமெரிக்கா நாடான கயானாவின் அதிபராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பரத் ஜாக்டியோ இரண்டாவதுமுறையாக பதவியேற்றுக் கொண்டார்.
தலைநகர் கேப்டவுனில் அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
அதிபராகப் பதவியேற்றுக் கொண்ட அவர், மக்களுக்கு விடுத்த வேண்டுகோளில் வன்முறை இல்லாத சமுதாயம்உருவாக அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். அனைத்து மக்களும் தேசிய ஒருமைபாட்டுடன் வாழவேண்டும். கயானாவில் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் நடந்து கொள்வேன் என்று கூறினார்.
இவர் 1964 ம் ஆண்டு பிறந்தார். கயானா அதிபராக இருந்த ஜனட் ஜகன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பரத் 1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கயானா அதிபராகப்பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ரஷ்யாவில் பயிற்சி பெற்ற பொருளாதார வல்லுநர்.
பரத் இந்திய, கயான மக்கள் முன்னேற்ற இடதுசாரிக் கட்சியின் தலைவர். இவர் கயானாவின் 7 வது அதிபர்ஆவார்.
கடந்த மார்ச் 19 ம் தேதி கயானாவில் பொதுத்தேர்தல் நடந்தது. தேர்தலில் பரத் அமோக வெற்றி பெற்றார்.இதையடுத்து, இவரது வெற்றியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
இவரை எதிர்த்து தேர்தலில் நின்ற முன்னாள் அதிபர் டேஸ்மன்ட் ஹோய்டே 42 சதவீத வாக்குகளைப் பெற்றார்.பரத் 53 சதவீத வாக்குகளைப் பெற்று அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கயானாவில் வாழும் இந்தியர்கள் அனைவரும் பரத்தின் ஆதரவாளர்கள். அவர்களின் வாக்குகள் முழுமையாகபரத்துக்கே சென்றது எனலாம். ஆனால் அதே நேரம் கயானாவில் வாழும் கருப்பு இனத்தவர் ஹோய்டேவுக்கேதங்கள் வாக்குகளை அளித்தனர்.
கயானாவில் உள்ள 7 லட்சம் மக்கள்தொகையில் 39 சதவீதம் பேர் ஆப்ரிக்காவிலிருந்து வந்த அடிமைகள்.இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் 47 சதவீதம் பேர்.
அதிபராகப் பதவியேற்றுக்கொண்ட பரத் முதலில் நிதியமைச்சராகப் பதவி வகித்து வந்தார். சர்வதேச அளவில்நிதித்துறையில் பல பதவிகளை வகித்து வந்தவர். சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எஃப்.) கவர்னராகவும், தொழில்மற்றும் வர்த்தக சபை தேசிய வங்கியின் இயக்குநராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications