வார்டன்களை மாற்றக் கோரி அல் உம்மாவினர் உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

இளம் சிறை வார்டன்களை மாற்றக் கோரி திங்கள்கிழமை முதல் அல் உம்மா இயக்கத்தினர் கோவை சிறையில்உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.

கோவை மத்திய சிறையில் மிகப் பெரும் பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. அதிகாரிகளுக்கும் சிறைவார்டன்களுக்கும், சிறைக்காவலர்களுக்கும் இடையே நீடித்து வரும் இந்த பனிப்போர், இப்போது கைதிகளின்உண்ணாவிரதத்தில் நிறுத்தியுள்ளது.

சிறைக்குள் இருக்கும் அல் உம்மாவினருக்கு உதவ மறுத்து வரும் போலீஸ்காரர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும்இடையே இறுக்கமான சூழ்நிலை ஏற்பட்டது. போலீஸ் அதிகாரிகள் மீது போலீசாரும், போலீசார் மீது உயர்அதிகாரிகளும் மாறி மாறிப் புகார் கூறினர்.

இந்த நிலையில் சிறைக்குள் இருந்து வரும் அல் உம்மா கைதிகளுக்கு பணப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதுகண்டுபிடிக்கப்பட்டது. இந்த பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பல காலமாக அல் உம்மா கைதிகளுக்கு இறைச்சி பரிமாற்ற முதல், உள்ளே அவர்களே சொந்தமாக சமையல்செய்து சாப்பிடும் அளவுக்கு "தாரளமயமாக்கப் பட்டிருந்தது. சிறையில் நடந்த அதிரடி சோதனையில், ஸ்டவ்உள்பட காய்கறிகள் எல்லாம் ஒரு முறை கைப்பற்றப்பட்டன.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 167 அல் உம்மா இயக்கத்தினர், அவர்களுக்கு உதவியவர்கள், டி.ஐ.ஜிஅலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் என சிறையில் 245 தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதற்காகசிறையில் இருந்து வருகின்றனர்.

இவர்களிடம், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்ற இளம் வார்டன்கள் இவர்களிடம் சற்றுகெடுபிடியாகவே நடந்து கொண்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அல் உம்மாவினர் இப்போது போராட்டத்தை துவக்கியுள்ளனர். திங்கள்கிழமை முதல்பாட்ஷாவின் தலைமையில் சிறைக்குள் உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இளம் சிறைவார்டன்களின் கெடுபிடியை இவர்கள் கண்டித்து உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+