ஏப்.14 ல் வேட்பாளர் பட்டியல் வெளியிடுகிறது திமுக
சென்னை:
திருச்சியில் தேர்தல் பிரசார தொடக்க விழா மாநாடு ஏப்ரல் மாதம் 9 ம் தேதி மாலை நடக்கும். வேட்பாளர் பெயர்பட்டியல் ஏப்ரல் 14 ம் தேதி சென்னையில் வெளியிடப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
இதுகுறித்து சென்னையில் முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி திருச்சி செல்லும் வழியில் சென்னை வந்தார். அவரை அமைச்சர்கள்பொன்முடியும், சமயநல்லூர் செல்வராஜூம் வரவேற்றார்கள்.
அவருடன் தமிழக தேர்தல் பிரச்சனை குறித்து விவாதிக்க மாட்டோம். தமிழகத்தில் திமுகவிலிருந்துவெளியேற்றப்பட்டாலும், மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியுடன் சேர்ந்து இருப்போம் என்று மதிமுகபொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் வெளியிடப்படும். புதிய நீதிக்கட்சி, திமுககூட்டணியுடன் இணையலாம். இணையாமலும் போகலாம். பேசுவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. அவர்கள்பேச வந்தால் பேசுவோம்.
எம்ஜிஆர் அதிமுகவினர் தேர்தலில் போட்டியிட கூடுதல் தொகுதிகள் கேட்டிருக்கிறார்கள். கேட்பது அவர்கள் உரிமை. இல்லை என்று எங்களுடைய இயலா மை யைச் சொல்வது எங்களுடைய நிலை மை. இன்னொரு மைவேண்டுமென்றால் அதுதான் உண் மை என்றார் கருணாநிதி.