விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் பிளவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் அமைப்பை திமுகவுக்கு விற்று விட்டார் திருமாவளவன் என்று விடுதலை சிறுத்தைகள்அமைப்பு உறுப்பினர் சீமா தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் விரைவில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் பிளவு ஏற்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து சீமா தங்கமணி சென்னையில் செவ்வாய்க்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

விடுதலை சிறுத்தைகள் அமைப்பு தலித்துக்களுக்கு ஆதரவு கொடுக்கும் கட்சி. ஆனால் இதில் உள்ள பறையர் இனமக்களுக்குப் போதுமான பாதுகாப்போ, சலுகைகளோ இல்லை.

திமுக, தலித் இன மக்களுக்கு எதிரான கட்சியாகும். இது திருமாவளவனுக்கே தெரியும். இருப்பினும் அவர் எப்படிதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டார் என்று தெரியவில்லை.

விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் இருக்கும் பறையர் விடுதலை பேரவை வரும் தேர்தலில் திமுகவுக்கோ,அதிமுகவுக்கோ ஆதரவளிக்க மாட்டோம். இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம்.

தலித் இன மக்களுக்கும், வன்னியர்களுக்கும் இடையே மோதல் உருவாகும் வகையில் பலமுறை வன்முறையைத்தூண்டி விட்டுள்ளார் திருமாவளவன்.

திருமாவளவன் மேல் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எங்களது பறையர் விடுதலை பேரவையினர்வரும் 8 ம் தேதி கடலூர் மாவட்டத்தில் மாநாடு நடத்தவுள்ளோம். இதில் பல அம்பேத்கார் அமைப்பினர் கலந்துகொள்வார்கள்.

விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி திருமாவளவன் ஜெர்மனியில் உள்ள பல அரசு சாராநிறுவனங்களிடமிருந்து நிதியுதவி பெற்று வருகிறார்.

ஆயிரக்கணக்கான பறையர் இன இளைஞர்கள் தங்கள் வேலை மற்றும் கல்வியைத் தூக்கியெறிந்து விட்டுவிடுதலை சிறுத்தைகள் அமைப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால் திருமாவளவனோ சுயநலத்துடன் நடந்து கொள்கிறார்என்றார் சீமா தங்கமணி.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+