வைகோவுடன் மேடையேற மாட்டோம்: பாஜக அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து பிரிந்து சென்ற மதிமுகவுடன் சேர்ந்து தேர்தல்பிரசாரம் மேற்கொள்வது சாத்தியமில்லாதது என்று அகில இந்திய பாஜக தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் மே 10 ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிராகஉள்ள எல்லா கட்சிகளையும் எதிர்த்து பாஜக பிரசாரம் மேற்கொள்ளும்.
சட்டசபைத் தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகளைத் தவிர பிற தொகுதிகளில் மதிமுக போட்டியிடும் என்றுகட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ஆனால் பாஜக, திமுக கூட்டணிக்கு எதிராக உள்ள கட்சிகளுக்கு ஆதரவாகப் ஒருபோதும் பிரசாரம் செய்யாது.
திமுக, மதிமுக கட்சிகளுக்கிடையே உள்ள பிரச்சனையில் பாஜக தலையிடாது. அவர்களுக்குள் ஏற்பட்டுள்ளபிரச்சனையை அவர்களேதான் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரும், காங்கிரஸ் கட்சியினரும் சேர்ந்து போட்டியிடத்தீர்மானித்திருக்கிறார்கள். அதனால் மேற்கு வங்காளத்தில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்றார்ஜனா.கிருஷ்ணமூர்த்தி.
தொகுதிகளைப் பங்கீடு செய்து கொள்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மதிமுக, திமுக கூட்டணியிலிருந்துவெளியேற்றப்பட்டது. இதையடுத்து வைகோ கூறுகையில், திமுக கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டாலும்நாங்கள் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வோம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.