பாடம் கற்பித்து விட்டது திமுக: மதிமுக புகார்
கரூர்:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ம.தி.மு.க வை வெளியேற்ற முடியாது என அக்கட்சியின் கொள்கைவிளக்க அணிச் செயலர் நாஞ்சில் சம்பத் கூறினார்.
கரூரில் செவ்வாய்க்கிழமை நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
தி.மு.க வுடன் உறவு வைத்துக் கொண்டால், கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படும் என தெரிந்தும் தேச நலன் கருதிநாங்கள் கூட்டணி வைத்துக் கொண்டோம்.
ஆனால், அதற்கு சரியான பாடம் கற்பித்து விட்டது தி.மு.க. தேர்தல் கூட்டணியில், தொகுதி ஒதுக்கீட்டுப்பிரச்னையில் 5 இடம் போதுமா என கொச்சைப்படுத்தும் விதத்தில் தி.மு.க வினர் கேட்டனர்.
கடந்த 1997ம் ஆண்டிலிருந்தே எங்கள் இயக்கத்தை நசுக்கமுயற்சிகளை தி.மு.க மேற்கொண்டது. தி.மு.கவிலிருந்து வெளியேறியவுடன் எங்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியும். அதே சமயம், தேசிய ஜனநாயகக்கூட்டணியிலிருந்து எப்போதும் ம.தி.மு.க வை வெளியேற்ற முடியாது என்றார் நாஞ்சில் சம்பத்.












Click it and Unblock the Notifications