For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 நாட்கள் சண்டை நிறுத்தம் செய்கிறது இலங்கை அரசு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கை அரசு ஏப்ரல் 13 ம் தேதியிலிருந்து இரண்டு நாட்கள் சண்டை நிறுத்தம் அறிவிக்கும் என்று தெரிகிறது.

இதுகுறித்து டெய்லி மிரர் பத்திரிக்கையில் வெளிவந்துள்ள செய்தி:

முதலில் இலங்கை அரசு புனித வெள்ளி மற்றும் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13, 14 தேதிகளில் சண்டைநிறுத்தம் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

சண்டை நிறுத்தம் அமலில் உள்ள இரண்டு நாட்களும் ராணுவ வீரர்கள், புலிகள் தாக்குதல் நடத்துவார்களாஎன்பதையும் கண்காணிப்பார்கள்.

சண்டை நிறுத்தத்திற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அது நீட்டிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

மேலும் வரும் மே மாதம் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைதொடங்கலாம் என்றும் தெரிகிறது.

இதுதவிர அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதன் முன்னறிவிப்பாக புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில்வாகனங்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்யவும் இலங்கை அரசு ஆலோசனை செய்துவருகிறது.

ஏற்கனவே வன்னி பகுதியில் வாழும் தமிழர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதற்குஇலங்கை அரசு அனுமதி அளித்து விட்டது. இது அமைதிப்பேச்சுவார்த்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்ப அறிகுறிஎன்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இதற்கிடையே, இலங்கையில் விடுதலைப்புலிகள் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்த சண்டை நிறுத்தம் மூன்று முறைநீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது என்று பத்திரிக்கைச் செய்தி தெரிவிக்கிறது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X