தேயிலை தொழில் நலிவடைய திமுக, பாஜக காரணம்: வீரமணி
ஊட்டி:
தேயிலைத் தொழில் நலிவடைய தி.மு.க, மற்றும் பாரதிய ஜனதா ஆட்சிகள் தான் காரணம் என திராவிடக் கழகப்பொதுச் செயலர் கி. வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
ஊட்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வீரமணி கூறியதாவது:
தேயிலை விலை வீழ்ச்சிக்கு தி.மு.க வும், அதன் கூட்டணி ஆட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியும் தான்காரணம். உலகமயமாக்கல் கொள்கையால் சாதரண மக்கள் சோகமயமாகவும், வறுமைமயமாகவும் மாறி விட்டனர்.
வேளாண்மை இறக்குமதி கொள்கையால் வேளாண்மைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன்களைஇரு அரசுகளும் அக்கறை செலுத்தவில்லை. கருணாநிதிக்கு தோல்வி ஏற்படும் என்ற நிலையால் தற்போதுபொதுமக்களின் நலனுக்காக எதையும் செய்ய மறுக்கிறார்.
பொதுமக்கள் செய்த பழைய தவறால் பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்துள்ளது. ஊட்டி எச்.பி.எப், மற்றும் சேலம்உருக்காலைகயை தனியார் மயமாக்கும் முயிற்சியால், தொழிலாளர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வருவார். இதனை மக்கள் உறுதி செய்து விட்டனர் என்றார்.