புதுவையில் காங். தொண்டர் அடித்துக் கொலை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சித் தொண்டர் ஒருவர் அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பலால்அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்துப் போலீசார் கூறுகையில், புதுவையைச் சேர்ந்தவர் ரவி. வயது (30). பெயிண்டரான இவர் காங்கிரஸ்கட்சித் தொண்டர். இவர் அங்கு பெயின்டு கடை வைத்து நடத்தி வந்தார்.
திங்கள்கிழமை இரவு இவர் கடையில் இருந்த போது, அடையாளம் தெரியாத கும்பல் இவரை கடையிலிருந்துவெளியே அழைத்து வந்தது. பின்னர் அவரை ஆட்டோவில் கடத்திக் கொண்டு சென்றது.
ஆட்டோ ஓல்டு போர்ட் காம்பிளக்ஸ் அருகே வந்து கொண்டிருந்த போது அக்கும்பல் ரவியை சராமரியாக அடித்துஉதைத்து கீழே தள்ளி விட்டுவிட்டுத் தப்பித்து விட்டது.
படுகாயமடைந்த ரவி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம்குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications