For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதிமுக இடங்கள் எங்களுக்கு வேண்டும்: திருநாவுக்கரசு

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திமுக கூட்டணியிலிருந்து பிரிந்து சென்ற மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 21 சீட்டுக்களிலிருந்து எங்களுக்கு சிலசீட்டுக்களைக் ஒதுக்குங்கள் என்று எம்.ஜி.ஆர்.அதிமுக பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு செவ்வாய்க்கிழமைமுதல்வர் கருணாநிதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மதிமுக, திமுக கூட்டணியிலிருந்து பிரிந்து செல்வதற்கு முன்பு அவர்களுக்கு 21 சீட்டுக்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.மதிமுக பிரிந்து சென்று விட்டதால் அந்த 21 இடங்களிலிருந்து சில தொகுதிகளை எங்களுக்குக் கூடுதலாக ஒதுக்கவேண்டும்.

ஒரு வேளை மதிமுகவினர் சமரசமடைந்து திமுக கூட்டணிக்குத் திரும்பி வந்தால் அவர்களிடம் எங்களுக்குக்கூடுதலாக ஒதுக்கப்படும் தொகுதிகளைத் திருப்பிக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.

தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற வேணடும் என்பதும், கருணாநிதியே அடுத்த முதல்வராக ஆகவேண்டும் என்பதும்தான் எம்ஜிஆர் அதிமுக வின் குறிக்கோளாகும். திமுக கூட்டணியின் வெற்றிக்காக நாங்கள்பாடுபடத் தயாராக இருக்கிறோம்.

மதிமுக மீண்டும் திமுக கூட்டணியில் இணையுமா என்பது குறித்து நான் எதுவும் கூற முடியாது. அது கருணாநிதிமற்றும் வைகோ ஆகியோர்களுக்கிடையே உள்ள பிரச்சனை. அதுபற்றி அவர்கள்தான் பேசி முடிவு எடுக்கவேண்டும்.

இந்த நேரத்தில் தமிழகத்தில் திமுக கூட்டணியிலிருந்து பிரிந்தாலும், மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நாங்கள் தொடருவோம் என்று மதிமுகபொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பதையும் நினைவுகூர வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கப் பெறாதவர்கள், தங்களிடமுள்ள வேறு அடையாளங்களைக் காட்டிஓட்டுப் போடலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன் என்றார் திருநாவுக்கரசு.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X