அ.தி.மு.க. கூட்டணிக்கு மதுரை ஆதீனம் ஆசிர்வாதம்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணிக்கே எனது ஆசிர்வாதங்கள் என்று கூறியுள்ளார் மதுரை ஆதீனம்.
மதுரை ஆதீனம் ஒரு காலத்தில் திமுகவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகபகிரங்கமாக குரல் கொடுத்த முதல் சமயத் துறவி. மதுரையில் கருணாநிதி நடத்திய இலங்கைப் போராளிகள்ஆதரவு மாநாட்டில் கலந்து கொண்டு பரபரப்பு ஏற்படுத்தியவர்.
தற்போது ஆதீனத்தின் குரல் மாறி விட்டது. அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார் ஆதீனம்.சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஆதீனம்,மூப்பனாரிடம் நலம் விசாரித்தார்.
பின்னர் வெளியே வந்த ஆதீனம் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசுகையில், எனது ஆசிர்வாதம்உங்களுக்கே உண்டு. மூப்பனாரே நேரடியாக இந்தத் தேர்தலில் நிற்பதாகக் கருதி பணியாற்றுங்கள்.
அதிமுக கூட்டணிதான் இந்தத் தேர்தலில் வெற்றி பெறும். அதுதான் வெற்றி கூட்டணி. நான் அரசியல்பேசவில்லை. அப்படி நினைக்காதீர்கள். நாட்டு நலன் கருதி இந்த அணியின் வெற்றிக்காக பாடுபடுங்கள்.
ஜெயலலிதாவும், மூப்பனாரும் ஒரே மேடையில் பேசுவார்கள். அதில் கலந்து கொண்டு அவர்களுக்கு நான்ஆசிர்வாதம் வழங்குவேன் என்றார் ஆதீனம்.












Click it and Unblock the Notifications