For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கைதிக்கு அடைக்கலம் கொடுத்த பெண்கள் கைது

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

போலீசிடமிருந்து தப்பிச் சென்ற கைதிக்கு அடைக்கலம் கொடுத்த பெண்கள் உள்பட 4 பேரைப் போலீசார் கைதுசெய்தனர்.

தாராபுரத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (40). திருட்டு வழக்கு ஒன்றில் தொடர்புடைய இவரைப் போலீசார் தேடிவந்தனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த இவரைப் போலீசார் கைது செய்து கோவை மத்தியசிறைக்கு அழைத்து வந்தனர்.

அப்போது கோவை பஸ் நிலையத்தில் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டுத் தப்பிச் சென்றார்.

தப்பிச் சென்ற மனோகரன் பொள்ளாச்சியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவரைபிடிக்க போலீசார் அங்கு சென்றார்.

அப்போது வீட்டில் இருந்த நடராஜன் (53), மனோகரனின் மனைவிகள் தங்கமணி, இந்திராணி ஆகியோரும்அவர்களுடன் மஞ்சுளா தேவி ஆகியோரும் இருந்துள்ளனர்.

போலீசார் வந்ததைக் கண்ட இவர்கள் , போலீசாரைப் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இது தொடர்பாகபோலீசார் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X