For Daily Alerts
Just In
குமரி அனந்தனின் சென்டிமென்ட் தொகுதி
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள குமரி அனந்தன் தனக்குராசியான தொகுதி என்று கூறப்படும் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கடந்த 1986 ம் ஆண்டு காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்து அதிமுகவுடன் கூட்டணிவைத்துக் கொண்டு ரோஜாப்பு சின்னத்தில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார். வெற்றியும் பெற்றார்.
இந்த முறை தொண்டர் காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கி திமுக கூட்டணியில் சேர்ந்துள்ளார் குமரிஅனந்தன். இவர் இந்த முறையும் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
திருவொற்றியூர் குமரி அனந்தனுக்கு ராசியான தொகுதிதானா என்பது தேர்தல் முடிந்தபின் தெரிந்து விடும்.
Story first published: Wednesday, April 4, 2001, 5:30 [IST]