For Quick Alerts
For Daily Alerts
Just In
கோர்ட்டில் ஆஜரானார் சசிகலா
சென்னை:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதாவின் தோழி சசிகலா,சென்னை முதலாவது தனி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மற்றும் சசிகலா மீது லஞ்ச ஒழிப்புப் பிவு போலீஸார்வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதலாவது தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது. தற்போது அரசுத்தரப்பு சாட்சிகளின் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது.
அரசுத் தரப்புச் சாட்சிகள் சசிகலாவை அடையாளம் காட்டும் வகையில், அவர் புதன்கிழமை கோர்ட்டில் ஆஜராகவேண்டும் என்று செவ்வாய்க்கிழமை கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து புதன்கிழமை கோர்ட்டில்ஆஜரானார் சசிகலா.
சசிகலாவை, அரசுத் தரப்பு சாட்சியான ஓய்வு பெற்ற பத்திரப் பதிவுத் துறை அதிகாரி ராஜகோபால் அடையாளம்காட்டினார்.
Comments
Story first published: Wednesday, April 4, 2001, 5:30 [IST]