கவனிப்பார் இல்லாததால் வயதான தம்பதி தற்கொலை
கோவை:
குழந்தை இல்லாத வயதான தம்பதியினர், தங்களை கவனிக்க ஆள் இல்லை என்ற சோகத்தில் விஷம் குடித்துதற்கொலை செய்து கொண்டனர்.
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (70). இவரது மனைவி ரங்கம்மாள் (60). இருவரும்விவசாயக் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
இவர்களுக்கு குழந்தை இல்லை. எனவே, இவர்கள் இருவரும் இறுதி காலத்தில் கவனிக்க ஆள் இல்லாமல்அவதிப்பட்டு வந்தனர்.
இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த இருவரும் விஷம் குடித்து இறந்தனர்.
மனைவியைப் பிரிந்தவர் தற்கொலை:
நோய்வாய்ப்பட்டு இறந்த மனைவியின் பிரிவைத் தாங்காத கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பூரில் நெசவுத் தொழில் செய்து வந்தவர் ஜெகநாதன் (38). இவரது மனைவி ஜோதிமணி (35). ஜோதிமணிஅடிக்கடி உடல் நலம் இல்லாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில், அவர் நோய்வாய்ப்பட்டு கடந்த வாரம் இறந்து விட்டார். மனைவி இறந்த சோகத்தில் ஜெகநாதன்இருந்து வந்தார்.
பின்னர், அவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் குடித்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.












Click it and Unblock the Notifications