3 இளம் புலிகள் இலங்கை ராணுவத்திடம் சரண்
கொழும்பு:
புலிகள் இயக்கத்தில் இருந்த 12 வயது சிறுவன் உள்பட 3 இளம் புலிகள், இலங்கை ராணுவத்திடம்சரணடைந்தனர்.
புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து இலங்கை ராணுவத்திடம் சரணடையும் புலிகளை, நாங்கள் கண்டுபிடித்துச்சுட்டுக் கொல்வோம் என்று புலிகள் தலைவர் பிரபாகரன் கூறியுள்ள நேரத்தில் இந்த 3 புலிகளும்சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இலங்கை அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், திரிகோணமலை அருகே கோவிலடி மற்றும்கோனேஸ்வரம் பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் புகுந்து புலிகள், 10 மாணவர்களைக் கடத்தி தங்கள்இயக்கத்துக்குக் கொண்டு சென்றனர்.
இவர்கள் அனைவரும் கடந்த மார்ச் 26 ம் தேதி எங்களிடம் சரணடைந்தனர். விடுதலைப்புலிகள், இவர்களைக்கடந்த டிசம்பர் மாதமே கடத்திச் சென்று ஒரு மாத பயிற்சியும் அளித்துள்ளனர்.
தற்போது 3 இளம் புலிகள் சரணடைந்துள்ளனர். மட்டக்களப்பில் புலிகள் இயக்கத்தில் இருந்த ஒருவர்ராணுவத்திடம் சரணடைந்துள்ளார் என்றார்.
யு.என்.ஐ.