இன்று மும்பை திரும்புகிறார் கிளின்டன்
மும்பை:
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாவட்டம் அகமதாபாத் சென்றுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன்வியாழக்கிழமை மும்பை திரும்புகிறார்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கட்ச் மற்றும் அகமதாபாத் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கிளின்டன்வியாழக்கிழமை மும்பை சத்திரபதி சிவாஜி சர்வதேச விமானநிலையத்தில் வந்திறங்குகிறார்.
மும்பையில் இரண்டு நாட்கள் தங்கும் கிளின்டன், இங்கு முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னான்டஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.
சரத்பவார் தற்போது பூகம்பம் மற்றும் இயற்கை சீற்ற நிகழ்வுகளை எதிர்கொள்ளும் குழுவின் துணைத் தலைவராகஉள்ளார்.
மேலும் ரிலையன்ஸ் நிறுவன சேர்மன் டி.அம்பானி மற்றும் டாடா நிறுவன தலைவர் ரத்தன் டாடா ஆகியோரைச்சந்தித்துப் பேசுகிறார் கிளின்டன். ஏப்ரல் 7 ம் தேதி கிளின்டன் மும்பையிலிருந்து கொல்கத்தா செல்கிறார்.
யு.என்.ஐ.