தனி சின்னத்தில் போட்டியிடுவோம் .. ஆர்.எம்.வீ.
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிட ஆர்.எம்.வீரப்பனின் எம்.ஜி.ஆர். கழகம் முடிவு செய்துள்ளது.
எம்.ஜி.ஆர். கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில், வியாழக்கிழமை நடந்தது. இக்கூட்டத்திற்குப்பின் ஆர்.எம்.வீரப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் கமிஷன் புதிய விதிமுறைப்படி ஒரு கட்சிக்குஅங்கீகாரம் கிடைக்க வேண்டுமானால், சொந்த சின்னத்தில் போட்டியிடுவது அவசியம் என விதி கொண்டுவரப்பட்டுள்ளது.
எனவே வரும் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். அரசியல் கட்சிக்கான சின்னம்கிடைக்காவிட்டால், சுயேச்சைகளுக்கான சின்னத்தில் போட்டியிடுவோம்.
திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக அனைத்துத் தொகுதிகளிலும் எம்.ஜி.ஆர். கழகம் முழுமையாகபாடுபடும். 234 தொகுதிகளிலும் வெற்றிக் கனியைப் பறிப்போம்.
வரும் தேர்தலில் கருணாநிதி தலைமையிலான அணியே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும். ஜெயலலிதாமுதல்வராவதை யாரும் விரும்பவில்லை என்றார் ஆர்.எம்.வீ.