For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எய்ட்ஸ் ஊசி போட்டுக் கொல்வோம்: கவுடாவுக்குக் கொலை மிரட்டல்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

முன்னாள் பிரதமர் தேவ கவுடாவையும், அவரது மகனையும் எய்ட்ஸ் ஊசி போட்டுக் கொல்வோம் என்று மிரட்டல்கடிதம் வந்ததையடுத்து தேவ கவுடா வீட்டைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பனசங்கரி போலீஸார் கூறியதாவது:

தேவகவுடாவையும், அவரது மகன் ரேவண்ணாவையும் எய்ட்ஸ் ஊசி போட்டுக் கொலை செய்து விடுவதாக சிலநாட்களுக்கு முன் அவர்கள் வீட்டுக்கு மொட்டைக் கடிதம் ஒன்று வந்தது.

கடிதத்தைப் பார்த்த தேவ கவுடாவின் மகன் அதை பனசங்கரி போலீஸ் நிலையத்தில் கொடுத்து, இதுகுறித்துநடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்தார்.

இந்த வழக்கு தற்போது, ஹோலநர்சிபுரா போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

மிரட்டல் கடிதம் கன்னட மொழியில் எழுதப்பட்டிருந்தது. அதில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா, அவரது மனைவிசென்னம்மா, தேவ கவுடாவின் மகன் ரேவண்ணா, ஆகியோரை எய்ட்ஸ் ஊசி போட்டுக் கொலை செய்துவிடுவோம் என்று எழுதப்பட்டிருந்தது. இந்தக் கடிதம் ஹன்சூர் தபால் முத்திரை உள்ளது என்று போலீசார்தெரிவித்தனர்.

முன்னதாக, கடந்த பிப்ரவரி 21 ம் தேதி கவுடாவின் மனைவி சென்னம்மாவும், அவரது மருமகளும் சிவாரத்திரிவிழாவை முன்னிட்டு கோவிலுக்குச் சென்று விட்டுத் திரும்புகையில் அவர்கள் மீது ஆஸிட் வீசப்பட்டதுநினைவிருக்கலாம். இந்தச் சம்பவத்தில் சென்னம்மா படுகாயமடைந்தார்.

இதுதொடர்பாக தேவகவுடாவின் சகோதரரின் மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்குகுறித்து சி.ஓ.டி.போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X