ஐஸ்கிரீம் சாப்பிட்ட 37 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், கரும்பிரை கிராமத்தில் படிக்கும் 37 பள்ளி மாணவ, மாணவிகள் ஐஸ்கிரீம் சாப்பிட்டபின் வாந்திஎடுத்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருப்பது குரும்பிரை என்னும் கிராமாம். இங்குள்ள பள்ளியில் படித்து வந்தமாணவ, மாணவிகள் கோடை வெயிலின் வெப்பத்தைத் தணிக்க ஆசையுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டனர். ஐஸ்கிரீம்சாப்பிட்டவர்களில் 20 பேர் மாணவிகள், 17 பேர் மாணவர்கள்.
ஐஸ்கிரீம் சாப்பிட்ட 37 பேரும் , ஐஸ்கிரீம் சாப்பிட்ட சிறிது நேரத்திற்கு பின் வாந்தி எடுக்க ஆரம்பித்தனர். உடனேஇவர்கள் அனைவரும் செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும பதட்டம் நிலவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications