மூப்பனாருக்கு 47 தொகுதிகள் பட்டியலை அனுப்பினார் ஜெ.
சென்னை:
தமாகா, காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 47 தொகுதிகள் பட்டியலை தமாகா தலைவர் மூப்பனாருக்கு,அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அனுப்பி வைத்துள்ளார்.
இதில் 22 தொகுதிகள் மட்டுமே உருப்படியான தொகுதிகள் என்று தமாகாவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதாவிடம் இருந்து அனுப்பப்பட்ட தொகுதிகள் பட்டியலை மூப்பனார் வாங்கி வைத்துக் கொண்டாலும்அவர் தொகுதிகள் பட்டியல் குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
இருப்பினும் தங்களுக்குத் திருப்தியில்லாத 25 தொகுதிகளை மாற்றித்தருமாறு ஜெயலலிதாவிடம், மூப்பனார்பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் ஏற்படாத நிலை உருவானால், இக்கட்சிகளுக்கு இடையே திமுக,மதிமுக கட்சிகளிடையே ஏற்பட்டது போல் மனக்கசப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்று கருதப்படுகிறது.
இதற்கிடையே இந்தத் தேர்தலில் அதிமுக 144 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தாங்கள் போட்டியிடும்தொகுதிகள் அனைத்தும் வெற்றி தரும் தொகுதிகளாக இருக்க வேண்டும் என்று அதிமுக விரும்புகிறது.அதற்கேற்றவாறு கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி வருகிறார் ஜெயலலிதா.