For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்களுடன் மதிமுகவுக்கு உறவுவே கிடையாதாம்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இனிமேல் திமுகவுடன் உறவே இல்லை என்று வைகோ, தனக்குக் கடிதம் எழுதியுள்ளதாக முதல்வர் கருணாநிதிதெரிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் சென்னை வந்தார். அவரை நான் சந்தித்துப் பேசவும் இல்லை.அவர் எனக்கு போன் செய்யவும் இல்லை.

பாண்டிச்சேரியில் கூடுதல் தொகுதிகள் தர வேண்டும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் கூறியுள்ளனர். அதுதொடர்பாக தேர்தல் பணிக்குழுவினர் பேசி வருகிறார்கள்.

எம்.ஜி.ஆர்.கழகத்தினர் தனிச் சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர். தேர்தல் ஆணையம் புதியவிதி ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுபவர், அந்தக் கட்சியின்உறுப்பினராக இருக்க வேண்டும். அதனால் தனிச்சின்னத்தில் போட்டியிடப் போவதாக எம்.ஜி.ஆர். கழகம்அறிவித்துள்ளது.

திமுக 174 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நான் உறவுக்காக வைகோவுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதைப்படிக்கும் போது உறவு வருமோ, வராதோ என்று சந்தேகத்துடன் எழுதியிருந்தேன். அப்போது இனிமேல்திமுகவுடன் மதிமுகவுக்கு உறவே கிடையாது என்று கூறும் வகையில் அந்தக் கடிதம் இருந்தது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X