For Daily Alerts
Just In
திருச்சியில் டாடா சுமோ மரத்தின் மீது மோதி 2 பேர் பலி
திருச்சி:
திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிராட்டியூர் அருகே டாடா சுமோ வேன், மரத்தின்மீது மோதியதில் 7 வயது சிறுவன் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து சனிக்கிழமை காலை நடந்தது. விபத்தில்இறந்தவர்கள் குறித்த பெயர், விவரம் எதுவும் தெரியவில்லை.
விபத்து குறித்து போலீஸார் கூறுகையில், டாடாசுமோ வேன், மரத்தின் மீது மோதி விட்டுத் தாறுமாறாக ஓடிக்கவிழ்ந்ததில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 15 பேரும் திருச்சி அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, April 7, 2001, 5:30 [IST]