தேர்தல் ஏற்பாடுகள்: தமிழக தேர்தல் ஆணையர் ஆலோசனை
சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மிருத்துஞ்சய் சாரங்கி வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள்குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அடுத்த மாதம் (மே மாதம்) 10ம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தலில் எந்தவிதமான அசம்பாவிதமும், முறைகேடுகளும் ஏற்படாத வகையில் நடத்த வேண்டும் என்பதற்கான முன்னேற்பாடுநடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாரங்கி சனிக்கிழமை உயர்அதிகாரிகள் கூட்டம்ஒன்றை கூட்டினார். இந்த கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் முத்துசுவாமி, உள்துறைச் செயவாளர் சாந்தாஷீலா நாயர், போலீஸ் டி.ஜி.பி. ராஜகோபாலன், கூடுதல் தேர்தல் தலைமை அதிகாரி உள்ளிட்ட பல உயர்அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தேர்தல் நல்ல முறையில் நடப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தவிவாதிக்கப்பட்டது. மேலும் எங்கெங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். எங்கெங்கு கூடுதல் போலீஸ்காவல் போடப்பட வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தமிழக அரசு ஏற்கனவே 125 கம்பெனி புறக்காவல் படையினரை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அனுப்பிவைக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அனைத்து கட்சி கூட்டத்தை இந்த மாதம் 9ம் தேதிகூட்டியிருக்கிறார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications