த.மா.கா.விலிருந்து விலக தயார்: சிதம்பரம்
சென்னை:
த.மா.கா. தன்னை கட்சியை நீக்கினால் விலக தயாராக இருப்பதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம்கூறியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க. தலைமையிலான அணியுடன் தேர்தல் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்துத.மா.காவிலிருந்து பிரிந்து த.மா.கா. ஜனநாயக பேரவை என்ற பெயரில் தனி கட்சியை துவக்கினார். அந்தபேரவை தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படும் எனவும் அறிவித்தார். இதனால் அவரை த.மா.காவிலிருந்து அவர்தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அவரது நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டு த.மா.கா. ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது.இந்நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் விலக தயாராக இருப்பதாக சிதம்பரம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், நான் த.மா.கா. ஒழுங்கு நடவடிக்கை விளக்கம் கேட்டு அனுப்பியநோட்டீசுக்கு பதில் அனுப்பி விட்டேன். நான் கட்சியிலிருந்து நீக்கப்படுவேனா என்பது குறித்து எனக்கு தெரியாது.ஆனால் நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்.
நான் கட்சியின் கட்டுப்பாட்டை எந்த விதத்திலும் மீறவில்லை. எந்த முடிவு எடுப்பதாலும் தேர்தல் முடிவு தெரியும்வரை கட்சி தலைமை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தி.மு.க.- ம.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் விட்டுக் கொடுத்து, சமரசம் செய்து கொண்டு தேர்தலில் இணைந்துபோட்டியிட வேண்டும். இரண்டு கட்சிகளுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது வருந்தத்தக்க விஷயம். இந்த இருகட்சிகளிடையேயான சமரச முயற்சியில் ஈடுபடுமளவுக்கு நான் முக்கியமானவன் அல்ல.
நான் த.மா.கா.ஜனநாயக பேரவையின் சார்பில் தி.மு.க. கூட்டணிக்காக பிரசாரம் செய்வேன். த.மா.கா.வுக்காகபிராசாரம் செய்வதா என்பது அந்த தொகுதியை பொறுத்தது. நான் இன்னமும் த.மா.கா.வில் தான் இருக்கிறேன்என்றார்.
விளக்கம் கேட்டு த.மா.கா. ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பதிலுக்கு சிதம்பரம் பதிலளித்துள்ள நிலையில் எந்தவிதாமான முடிவும் எடுக்க முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.