முன்னாள் துணை பிரதமர் தேவிலால் மரணம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
முன்னாள் துணை பிரதமர் தேவிலால் டெல்லியில் வெள்ளிக்கிழமை மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்குவயது 86.
முன்னாள் பிரதமர் வி.பி.சிங். அமைச்சரவையில் துணை பிரதமராக இருந்தவர் தேவிலால். இவர் ஹரியானாமாநிலத்தில் பலமுறை முதல்வராகவும, மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
சுமார் 50 ஆண்டுகள் அரசியல் தலைவராக இருந்த இவர் 1914 ம் ஆண்டு செப்டம்பர் 25 ம் தேதி சவுதாலாகிராமத்தில் பிறந்தார். சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்றவர் இவர்.
தேவிலால் தற்போதைய ஹரியானா மாநில முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் தந்தை ஆவார்.
சில வாரங்களாக மாரடைப்பால் பாதிக்கப்பட்டு வந்த அவர் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். வெள்ளிக்கிழமை மாலை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து இரவு 7.30மணிக்கு மரணமடைந்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications