காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பானிகால் பகுதியில் வெள்ளிக்கிழமை தீவிரவாதிகளுக்கும் சிறப்பு அதிரடிப்படைபோலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்முவிலிருந்து 180 கிலோமீட்டர் வடக்கே பானிஹால் பகுதியில் உள்ள நீல்வாஸ் பகுதியில் தீவிரவாதிகள்பதுங்கியிருந்த பகுதியில் அதிரடிப்படை போலீசார் தாக்குதல் நடத்தினர்.
போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே சுமார் 3 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 3தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் 3 பேரும் வெளிநாட்டுத் தீவிரவாதிகள்.
இவர்கள் அனைவரும் லஸ்கார் ஈ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றுசந்தேகிக்கப்படுகிறது.
இதற்கிடையே, ராஜோரி மாவட்டம் தானா மண்டி பகுதியில், தீவிரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையேநடந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் ஹர்கத்துல் ஜிஹாத் இ இஸ்லாமி தீவிரவாதஅமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.