அடுத்த மாதம் புலிகள்-இலங்கை அரசு பேச்சுவார்த்தை
சென்னை:
புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்திக்கவுள்ள நார்வே தூதுக்குழு உறுப்பினர் வெஸ்ட்போர்க்,பிரபாகரனிடம் மே மாத மத்தியில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தேதி, நேரம் ஆகியவை குறித்துவிவாதிப்பார் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
ஆளும் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், விவசாயத்துறை அமைச்சருமான ஜெயரத்னே கூறுகையில்,தமிழ் புத்தாண்டு முடிந்ததும் நாடாளுமன்றக் கூட்டம் நடக்கவுள்ளது. அப்போது அதிபர் சந்திரிகா குமாரதுங்காவிடுதலைப்புலிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பான கொள்கைகளை உருவாக்குவார்.
அமைதிப் பேச்சுவார்த்தையில் பிரதிநிதிகளாக யார் யார் பங்கேற்பார்கள் என்பது குறித்து இன்னும் தகவல்கள்வெளியிடப்படவில்லை. இருப்பினும் விரைவில் பேச்சுவார்த்தை தொடங்குவது உறுதி.
நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் முன்னிலையில் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் முதல்கட்டபேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, இலங்கைக்கான நார்வே தூதரும், தூதரக உறுப்பினர் இன்னொருவரும் புலிகள் கட்டுப்பாட்டில்இருக்கும் வன்னி பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்றனர்.
இதுகுறித்து புலிகளின் வானொலியான வாய்ஸ் ஆப் டைகர்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கைக்கான நார்வேதூதர்கள் வெள்ளிக்கிழமை பல்லமாடு பகுதியில் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனை சந்தித்துப்பேசினார்கள் என்று உறுதிப்படுத்தியுள்ளது.
இவர்களை வன்னியில் மூத்த விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்கள் எஸ்.தங்கன், புலித்தலைவன் ஆகியோர்வரவேற்றனர். புலிகள் பகுதிக்கு வந்த அவர்கள் பிரபாகரனை சந்தித்தார்களா என்பது குறித்து தகவல்கள் இல்லைஎன்றும் கூறியுள்ளது.
இதற்கிடையே, கடந்த நவம்பர் மாதம் நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் மற்றும் தூதுக்குழுவில்இடம்பெற்றுள்ள வெஸ்ட்போர்க் ஆகியோர் பிரபாகரனைச் சந்தித்துப் பேசினார்கள்.
இதற்கிடையே, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில்கூறுகையில், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் நேரம், இடம், தேதி ஆகியவை குறித்து இலங்கை அரசு ஏப்ரல்மாத இறுதியில் தெரிவிக்கும் என்றார்.
அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு வசதியாக அரசு வன்னி பகுதிக்கு வாகனங்கள் செல்வதற்குவிதித்திருந்த தடையை நீக்கியுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரனில்விக்ரமசிங்கேவும் இந்த மாதம் 3 வது வாரத்தில் நார்வே தலைநகர் ஓஸ்லோ செல்கிறார்.
யு.என்.ஐ.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications