ஏப்.16 ல் வேட்பாளர் பட்டியல் வெளியிடுகிறது பாமக
காரைக்கால்:
வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் பா.ம.க. சார்பில் தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் போட்டியிடும்வேட்பாளர்கள் பட்டியல் இந்த மாதம் 16ம் தேதி வெளியிடப்படும் என பா.ம.க.வின் நிறுவனத் தலைவர் ராமதாஸ்கூறியுள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
பாண்டிச்சேரியில் சுழற்சி ஆட்சி முறையில் முதல் இரண்டரை ஆண்டுகள் பா.ம.க.தான் ஆட்சி செய்யும். இதில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது.
பா.ம.க. ஆட்சி அமைத்தால் முதல்வராக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவரோ, மீனவரோ அல்லதுபிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்தான் முதல்வராக வருவார்.
கூட்டணிக்கு காங்கிரசுக்கு விதித்த காலக்கெடு சனிக்கிழமை மாலையுடன் முடிவடைகிறது. அதன் பின் எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் கலந்து ஆலோசித்த பின்முடிவெடுக்கப்படும்.
பா.ம.க.வுடன் எந்த விதமான ஆட்சி பங்கீடுக்கும் காங்கிரஸ் சம்மதிக்காது என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் கூறியிருப்பது பற்றி நான் எந்த விதமான கருத்தும் கூற விரும்பவில்லைஎன்றார்.
யு.என்.ஐ.