பாண்டி. அதிமுக மகளிர் அணி தலைவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அதிமுக மகளிர் அணி தலைவி ப்ரியா சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், பாண்டிச்சேரியில் உள்ள ரெட்டியார்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர்ப்ரியா. வயது 40. இவர் அதிமுக பெண்கள் பிரிவு தலைவராக இருந்தார்.
இவர் வீட்டுக்கதவு சனிக்கிழமை காலை நெடுநேரமாகியும் திறக்கப்படாத காரணத்தால் கட்சித் தொண்டர்கள் பலர்இவர் வீட்டுக்கு வந்து பூட்டை உடைத்து பார்த்தனர்.
அப்போது தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் இவரது வீட்டுக்குச்சென்று இவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர் பாண்டிச்சேரி பிரிவு அதிமுக இணை செயலாளராக இருந்தார். இவரது தற்கொலைக்கான காரணம் எதுவும்தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications