For Daily Alerts
Just In
ஆட்சியை பிடிக்க புலிகள் ஆதரவு கட்சிகள் முயற்சி: சுவாமி
மதுரை:
தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் விடுதலைப்புலிகள் ஆதரவு கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கின்றனஎன்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மதுரையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் வரும் மேமாதம் 10 ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கிறது.
இந்தத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியைப்பிடிக்க புலிகள் ஆதரவு கட்சிகள் முயற்சிக்கின்றன.மக்கள் இவர்களை தேர்ந்தெடுத்து ஏமாந்து விட வேண்டாம். பாஜகவுக்கோ அல்லது திராவிட கட்சிகளுக்கோமக்கள் வாக்களிக்கக் கூடாது.
சரியான, நேர்மையான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் மக்களின் கடமை என்றார் சுப்ரமணியம் சுவாமி.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, April 7, 2001, 5:30 [IST]