இவர் பணம் வாங்கும் போலீஸ் இல்லை
சென்னை:
புகார் கொடுக்க வரும் பெண்களை காவல் நிலையத்திலேயே வைத்து கற்பழிப்பது, ஜெயிலில்கஞ்சா விற்பது, லஞ்சம் வாங்கிக் கொண்டு சலாம் போடுவது, கள்ளச்சாராயம் காய்ச்சச்சொல்லி கட்டாயப்படுத்துவது என பெயரை நாறடித்துக் கொண்டுள்ள போலீசார்மத்தியில் ஒரு போலீஸ்காரர் தனது நேர்மையால் உயர்ந்து நிற்கிறார்.
சென்னை விமான நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் கருணாநிதி. சிங்கப்பூர் பயணிதவறவிட்ட ரூ.40,000---தை அந்த பயணியை தேடி, அலைந்து கண்டுபிடித்துஒப்படைத்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இருக்கும் கஸ்டம்ஸ் சோதனை அலுவலகத்திற்குஅருகே சிங்கப்பூர் செல்லும் பயணி ஒருவர் தவறுதலாக ரூ.40,000 அடங்கிய பையைவிட்டுவிட்டு சென்று விட்டார்.
இந்த பையை கான்ஸ்டபிள் கருணாநிதி பார்த்தார். பையை எடுத்து திறந்து பார்த்தபோது அதில் பணம் இருப்பதை கண்டார். உடனடியாக அதில் இருந்த விலாசத்தைக்கொண்டு அந்த பணத்திற்கு உரியவர் சிங்கப்பூர் செல்பவர் என கண்டுபிடித்துபணப்பையை பயணியிடம் ஒப்படைத்தார்.
பணம் வாங்கியே பழக்கமான போலீசார் மத்தியில் அடுத்தவர் பணத்தைஒப்படைக்கும் ஒரு நல்ல போலீஸ் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர் தான்.
யு.என்.ஐ.