பழைய இரும்புக் கடையில் வெடி விபத்து: 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ராணுவத்திடமிருந்து வாங்கப்பட்ட பழைய இரும்புப் பெட்டியை உடைத்தபோது அது வெடித்ததில் 4 பேர் இறந்தனர். ஒருவர்படுகாயமடைந்தார்.
பழைய இரும்புக் கடையில் இந்த விபத்து நடந்தது. சென்னையை அடுத்த பம்மலில் உள்ள அண்ணா நகர் என்ற இடத்தில் பழையஇரும்புக் கடை உள்ளது.
இங்கு ராணுவத்திடமிருந்து வாங்கப்பட்ட பழைய இரும்பை தொழிலாளர்கள் பிரித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒருஇரும்பு டப்பா வெடித்துச் சிதறியது. அது வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்த பெட்டி எனத் தெரிகிறது.
இதில் அந்த இடத்திலேயே 3 பேர் இறந்தனர். ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
ஒருவர் பலத்த காயத்துடன் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications